தி.மு.க ஆட்சியில் பள்ளியில் ராகிங் என்று பரவும் வீடியோ உண்மையா?

False அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

தி.மு.க ஆட்சியில் அரசு இளநிலைக் கல்லூரியில் ராகிங் நடந்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இளைஞர்கள் பலரும் சேர்ந்து ஒரு மாணவனை அடிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தாச்சேப்பள்ளி அரசு இளநிலை கல்லூரியில் ராகிங் அலப்பறை

எஸ்பி காரு மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியும் வரை இந்த வீடியோவை ஷேர் செய்யவும்.

திமுக ஆட்சியில் மாணவர்கள் பாதுகாப்பு இல்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தி.மு.க ஆட்சியில் மாணவர்களுக்கு கூட பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்றைச் சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் இளநிலை கல்லூரி என்றெல்லாம் இல்லை. பள்ளி, கல்லூரி தான். பிளஸ்1, பிளஸ் 2 முறை இல்லாத மாநிலங்களில்தான் இளநிலை கல்லூரிகள் செயல்படுகின்றன. அதுவும் தாச்சேப்பள்ளி என்ற ஊரின் பெயர் சந்தேகத்தை அதிகரிக்கச் செய்தது. மேலும், மாணவனை அடிப்பவர்கள் தெலுங்கு மொழியில் பேசுவதை கேட்க முடிகிறது. இவை எல்லாம் இந்த வீடியோ ஆந்திரா அல்லது தெலுங்கானாவைச் சார்ந்ததாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

Archive

வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த சம்பவம் ஆந்திராவில் 2025 ஆகஸ்ட் மாதம் பாலநாடு (Palnadu) மாவட்டத்தில் உள்ள தாச்சேபள்ளி (Dachepalle) என்ற ஊரில் நடந்ததாக செய்திகள் பலவும் கிடைத்தன. தெலுங்கு ஊடகங்களில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவுடன் செய்தியை வெளியிட்டிருந்தனர். தாக்குதலுக்கு ஆளான மாணவனின் பெற்றோர் இது தொடர்பாக போலீசில் புகார் செய்திருப்பதாகவும், அதன் அடிப்படையில் குற்றவாளிகள் மீது கிரிமினல் சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் கிடைத்தன.

உண்மைப் பதிவைக் காண: indiatoday.in I Archive I timesofindia I Archive

மேலும், தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆன நிலையில் ஹாஸ்டல் வார்டன் தீபிகா மற்றும் வாட்ச்மேன் சஞ்சீஸ்வர் ராவ் ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்தும் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட மாணவர்களை ஹாஸ்டலில் இருந்து வெளியேற்றியும்  மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் கிடைத்தன. பாதிக்கப்பட்ட மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் செய்திகள் கிடைத்தன. 

இந்த ஆதாரங்கள் எல்லாம் இந்த சம்பவம் ஆந்திரப்பிரதேசத்தில் நடந்தது என்பதை உறுதி செய்கின்றன. ஆந்திராவில் தெலுங்கு தேசம், பாஜக கூட்டணி ஆட்சி உள்ளது. ஆந்திரா அரசுக்கும் தி.மு.க-வுக்கும் தொடர்பில்லை. ஆந்திராவில் நடந்த வீடியோவை தமிழ்நாட்டில் நடந்ததாகத் தவறாகப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியில் மாணவர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகப் பரவும் வீடியோ தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஆந்திராவில் மாணவர் தாக்கப்பட்ட வீடியோவை எடுத்து தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:தி.மு.க ஆட்சியில் பள்ளியில் ராகிங் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply