‘என்எல்சி நிர்வாகம் மத்திய அரசின் உதவியை நாட வேண்டும்’ என்று அண்ணாமலை கூறினாரா?
‘’என்எல்சி நிர்வாகம் மத்திய அரசின் உதவியை நாட வேண்டும்,’’ என்று அண்ணாமலை கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ என்எல்சி 2வது சுரங்க விரிவாக்கம் தேவை. மக்கள் பத்து வருடங்களுக்கு முன்பே நிலங்களை மத்திய அரசின் என்எல்சி நிர்வாகத்திற்கு விற்பனை செய்துவிட்டார்கள்; இன்றுவரை அதிலிருந்து வெளியேறாமல் இருப்பதே தவறுதான். மக்கள் வெளியேறாவிட்டால் மத்திய அரசின் உதவியோடு என்எல்சி நிர்வாகம் விளைநிலங்களை கையகப்படுத்த வேண்டும்- தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
என்எல்சி சார்பாக, கடலூர் மாவட்டம், வளையமாதேவி கிராமத்தில் ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு விளைநிலங்கள் மீது கால்வாய் அமைக்கும் பணிகள் நடப்பதற்கு, எடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதற்கிடையே, பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை ‘’என் மண் என் மக்கள்’’ என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். இதையொட்டி, அவரை கேலி செய்தும், விமர்சித்தும் சமூக வலைதளங்களில் பலர் தகவல் பரப்புகின்றனர்.
இந்த வரிசையில் பகிரப்படும் வதந்திதான் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ள புதிய தலைமுறை லோகோவுடன் கூடிய நியூஸ் கார்டும்…
ஆம், ‘’இந்த செய்தியை நாங்கள் வெளியிடவில்லை’’ என்று புதிய தலைமுறை டிவி தரப்பில் நம்மிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருந்தார் என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தி போலியானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
Title:‘என்எல்சி நிர்வாகம் மத்திய அரசின் உதவியை நாட வேண்டும்’ என்று அண்ணாமலை கூறினாரா?
Written By: Fact Crescendo TeamResult: False