ஊடகத்தினரைப் பார்த்து மோடி அருவருக்கிறார் என்று அண்ணாமலை கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

ஊடகத்தினரைப் பார்த்து பிரதமர் மோடி அருவருக்கிறார் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஊடக பிரச்சைக்காரர்களை பார்த்து மோடி அருவருக்கிறார். ஊடகத்துறையினர் பிச்சைக்காரர்களைப் போல் பிரதமர் மோடியை சுற்றி நின்று “தேர்தல் வாக்குறுதியான 15 லட்சத்தை எப்போது தருவீர்கள்?” என்று கேட்பதால்தான் அவர் பத்திரிகையாளர் சந்திப்பையே தவிர்த்து வருகிறார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை” என்று இருந்தது. இந்த பதிவை Ruskin Jose என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 மார்ச் 18ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பத்திரிகையாளர்களைப் பிச்சைக்காரர்கள் என்று அண்ணாமலை விமர்சனம் செய்தது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. ஆனால், அந்த நியூஸ் கார்டில் தமிழ் ஃபாண்ட், டிசைன் வழக்கமாக ஜூனியர் விகடன் வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ளது போல இல்லை. தேதி அழிக்கப்பட்டிருந்தது. எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

முதலில் ஜூனியர் விகடனில் தற்போது இப்படி ஏதும் நியூஸ் கார்டு வந்துள்ளதா என்று பார்த்தோம். அப்படி எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. எனவே, ஜூனியர் விகடன் டிஜிட்டல் பொறுப்பாளர் ரெ.சு.வெங்கடேஷூக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பி இது பற்றிக் கேட்டோம். அவரும் இது போலியான நியூஸ் கார்டு என்று உறுதி செய்தார்.

அண்ணாமலை இப்படி ஏதும் பேட்டி அளித்துள்ளாரா என்று தேடிப் பார்த்தோம். ஆனால், அப்படி எதுவும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக பாஜக நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது, ஊடகவியலாளர் ஒருவர் பெயரைக் குறிப்பிட்டு வழக்கமாக அவர் செய்யும் போலியான நியூஸ் கார்டுதான் என்று குறிப்பிட்டார். இதன் மூலம் ஊடகவியலாளர்களைப் பிச்சைக்காரர்கள் என்று அண்ணாமலை விமர்சனம் செய்தாக பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஊடகவியலாளர்களைப் பார்த்து மோடி அருவருக்கிறார் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஊடகத்தினரைப் பார்த்து மோடி அருவருக்கிறார் என்று அண்ணாமலை கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False