
‘பாஜக தேசிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட உள்ளார்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ பாரத ஜனதா கட்சியின் அடுத்த தேசிய தலைவரா அண்ணாமலை தேர்வாக உள்ளார்’’ என்று எழுத்துப் பிழைகளுடன் எழுதப்பட்டுள்ளது.
இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட X பதிவு பார்ப்பதற்கு, அண்ணாமலை ஆதரவாளர்கள் வெளியிட்டதைப் போன்றே உள்ளது.
ஆனால், இது உண்மையில் அண்ணாமலை ஆதரவாளர்கள் வெளியிடவில்லை. அவர்களை கேலி செய்யும் நோக்கில் நடத்தப்படும் parody account ஆகும்.

ஏற்கனவே, இந்த ஐடி இதுபோன்று பல முறை வதந்தி பரப்பியுள்ளது. நாமும் அவ்வப்போது ஃபேக்ட்செக் செய்து வந்துள்ளோம்.
எனவே, கேலி செய்யும் வகையில் பகிரப்பட்ட பதிவை பலரும் உண்மை என நம்பி பகிர்வதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:பாஜக தேசிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட உள்ளாரா?
Written By: Fact Crescendo TeamResult: False
