
‘’மோடி, யோகி ஆதித்யநாத், ஏக்நாத் ஷிண்டே மற்றும் திரௌபதி முர்மு ஆகியோரின் இளமைக்கால புகைப்படம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இந்த தகவலை ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்தி மட்டுமின்றி தமிழிலும் பலர் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட புகைப்படத்தில், யோகி ஆதித்யநாத் பற்றியது மட்டுமே உண்மையாகும். இதுபற்றிய செய்தி ஆதாரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

அடுத்தப்படியாக, மோடி பற்றிய புகைப்படம் ஃபோட்டோஷாப் செய்த ஒன்றாகும். ஏற்கனவே நாம் இதுபற்றி செய்தி வெளியிட்டிருக்கிறோம்.

Fact Crescendo Tamil Article Link
இதேபோல, திரௌபதி முர்மு மற்றும் ஏக்நாத் ஷிண்டே பற்றி பரவும் புகைப்படங்களும் வெவ்வெறு நபர்களுக்குச் சொந்தமானவை. இதுபற்றி நாம் ஏற்கனவே ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் செய்தி வெளியிட்டிருக்கிறோம். அவற்றின் லிங்க் கீழே தரப்பட்டுளளது.
Fact Crescendo English Article Link I Fact Crescendo Tamil Link
எனவே, யோகி ஆதித்யநாத் பற்றிய புகைப்படம் தவிர மற்ற அனைத்து புகைப்படங்களும் வெவ்வேறு நபர்களுடையது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:Rapid FactCheck: மோடி, திரௌபதி முர்மு, யோகி ஆதித்யநாத் மற்றும் ஏக்நாத் ஷிண்டேவின் இளமைக்கால புகைப்படம் இதுவா?
Fact Check By: Fact Crescendo TeamResult: Partly False
