
‘’நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களில் உச்ச நீதிமன்றம் தலையிடக்கூடாது. வக்ஃப் சட்டத்திற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி கருத்து’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ சட்டமியற்றுவதில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது. நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களில் நீதிமன்றத்தின் தலையீடு கூடாது. அப்படி தலையிட்டால் நீதிபரிபாலன சமன்பாடு குறைந்துவிடும் அபாயம் உண்டு. வக்ஃபு சட்டம் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றிய கேள்விக்கு ஈபிஎஸ் பதில்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
தினமலர் லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது வேண்டுமென்றே அரசியல் உள்நோக்கத்துடன் பகிரப்படும் வதந்தி, என்று தெரியவந்தது.
ஆம், இதுதொடர்பாக, தினமலர் ஆசிரியர் குழு மற்றும் அதிமுக ஐடி பிரிவு ஆகியோரிடம் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.
கூடுதல் ஆதாரத்திற்காக அதிமுக ஐடி பிரிவு தனது அதிகாரப்பூர்வ X வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றையும் கீழே இணைத்துள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு போலியானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களில் உச்ச நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?
Written By: Pankaj IyerResult: False
