அண்ணாமலை பாத யாத்திரையை புறக்கணிக்கிறோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினாரா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

‘‘அண்ணாமலை பாத யாத்திரையை புறக்கணிக்கிறோம்,’’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ ஜெயக்குமார் கேள்வி. கூட்டம் சேர்க்க மட்டும் கூட்டணி தயவு தேவைப்படுகிறதா? அண்ணாமலை மட்டும் தனியாக நடக்கட்டும். அதிமுக இந்த நிகழ்ச்சியை புறக்கணிக்கும்’’, என்று எழுதப்பட்டுள்ளது. 

தந்தி டிவி லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.  

Facebook Claim Link 

உண்மை அறிவோம்:

பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை ‘’என் மண் என் மக்கள்’’ என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

இதையொட்டி, அவரை கேலி செய்தும், விமர்சித்தும் சமூக வலைதளங்களில் பலர் தகவல் பரப்புகின்றனர். 

Fact Crescendo Tamil Link 1 l Fact Crescendo Tamil Link 2 l Fact Crescendo Tamil Link 3 

இதேபோல, மேற்கண்ட செய்தியும் போலியான ஒன்றுதான். ஆம், ‘’இந்த செய்தியை நாங்கள் வெளியிடவில்லை,’’ என்று தந்தி டிவி ஆசிரியர் குழு நம்மிடம் மறுப்பு தெரிவித்துள்ளது.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தி போலியான ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram 

Avatar

Title:அண்ணாமலை பாத யாத்திரையை புறக்கணிக்கிறோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினாரா?

Written By: Fact Crescendo Team 

Result: False