
‘’உள்ளாட்சி தேர்தலில் திமுக வென்றால் வீட்டுக்கு ஒரு பங்களா தரப்படும்,’’ என்று ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டிருந்த ஒரு பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link | Archived Link |
DMK Fails எனும் ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை வெளியிட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் கையில் ஒரு பதாகை உள்ளதுபோன்ற புகைப்படத்தை பகிர்ந்து, அதில், ‘உள்ளாட்சியில் வெற்றி பெற்றால் வீட்டுக்கு ஒரு பங்களா வழங்கப்படும், சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம்‘ என எழுதப்பட்டுள்ளது. இதனை உண்மை என நம்பி பலர் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பான சட்டத்தில், மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. அதேசமயம், நாடு முழுக்க குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. பல இடங்களில் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையாக மாறி, சட்டம், ஒழுங்கையும் பாதித்துள்ளன.
இதுபற்றி மேலும் விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இத்தகைய சூழலில், டிசம்பர் 23ம் தேதி திமுக சார்பாக, கண்டனப் பேரணி நடத்தப்பட்டது. அந்த பேரணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட திரளானோர் பங்கேற்றனர். பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த பேரணி தொடர்பாக பலவிதமான வதந்திகள் சமூக ஊடகங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான் மேற்கண்ட ஃபேஸ்புக் புகைப்பட பதிவும்.
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம்பெற்றுள்ள புகைப்படத்தின் உண்மையான படம் கீழே தரப்பட்டுள்ளது.

News Link | Archived Link |
எனவே, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக நடத்திய கண்டன பேரணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை எடுத்து, தவறான வதந்தி பரப்பியுள்ளனர் என்று தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் புகைப்பட பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ஒவ்வொருவருக்கும் பங்களா தருவோம் என்று மு.க.ஸ்டாலின் சொன்னாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
