
‘‘திமுக வந்ததால் தமிழக மக்கள் பிராமணர்கள் காலில் விழுவதை நிறுத்திவிட்டனர்,’’ என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ அழிந்துபோன பிராமணர்கள் மரியாதை
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் பிராமணர்கள் மீது அனைவரும் மரியாதை வைத்து இருந்தார்கள். ஆனால் 1967-ல் திமுக ஆட்சிக்கு வந்தபின் பிராமணர்கள் காலில் விழுந்து வணங்கும் இந்து மதத்தின் புனிதப் பண்பாடு அழிக்கப்பட்டு விட்டது. இதனாலேயே நான் RSS இயக்கத்தில் சேர்ந்தேன்”- துக்ளக் குருமூர்த்தி,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது பொய்யான தகவல் என்று, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி ஏற்கனவே மறுப்பு தெரிவித்துள்ளதைக் கண்டோம்.

எனவே நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
Title:திமுக வந்ததால் தமிழக மக்கள் பிராமணர்கள் காலில் விழுவதை நிறுத்திவிட்டனர் என்று குருமூர்த்தி கூறினாரா?
Fact Check By: Pankaj IyerResult: False


