
‘’ மணிப்பூர் வன்கொடுமை வழக்கில் சிக்கிய ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவு மக்களிடையே ஏற்பட்டுள்ள மோதல் பெரும் கலவரமாக வெடித்துள்ளது. இதையொட்டி, பல இடங்களில் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடைபெறுவதாகக் குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் நிறைய பகிரப்படுகின்றன.
இந்நிலையில், ‘’பெண்களை நிர்வாணமாக நடத்திச் சென்ற குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களது புகைப்படம் இதோ,’’ என்று கூறி, மேற்கண்ட வகையில் சிலர் தகவல் பகிர்கின்றனர்.
ஆனால், இந்த விவகாரத்தில் தொடர்புடைய நபர்களின் படம் சில காரணங்களுக்காக பொதுவெளியில் இதுவரை துல்லியமாகக் காட்டப்படவில்லை.
உண்மை இவ்வாறு இருக்கும்போது, ‘குறிப்பிட்ட குற்றவாளிகளின் படம் இதோ, அவர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்,’ என்றும் கூறி சமூக வலைதளங்களில் வதந்தி பகிரப்படுகிறது.
இதனை இந்த படத்தில் உள்ள நபரே மறுத்துள்ளார். அவர் இதுபற்றி போலீசில் புகார் செய்துள்ளதாகக் குறிப்பிட்டு, ட்வீட் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அடுத்தப்படியாக, இந்த விவகாரம் தொடர்பாக, மணிப்பூர் போலீசாரும் எச்சரித்துள்ளனர்.
இதுதவிர இந்த தகவலை முதலில் சமூக வலைதளங்களில் பகிர்ந்த நபரும் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுள்ளார். அதனையும் கீழே இணைத்துள்ளோம்.
எனவே, அவசர கதியில் மேற்கண்ட புகைப்படத்தை ஒருவர் முதலில் பரப்ப, அது ஆங்கிலம், இந்தி என பல்வேறு மொழிகள் கடந்து, தமிழ் மொழிக்கும் வந்துள்ளது. நாம் ஆய்வு செய்த தகவல், அடிப்படை ஆதாரமற்ற வதந்தி என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:மணிப்பூர் வன்கொடுமை வழக்கில் சிக்கிய ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…
Written By: Fact Crescendo TeamResult: False
