மும்பையில் ராமர் யாத்திரையில் தாக்குதல் நடத்தியவர்களை மும்பை போலீஸ் கைது செய்த காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

போலீசார் ஒருவரை இழுத்துச் செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 24ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "மும்பையில் கடந்த 22ம் தேதி ராம் யாத்ரா மீது தாக்குதல் நடத்தியவர்கள் இன்று வீட்டில் இருந்து இழுத்து வந்து லாடம் கட்டப்பட்டனர் " என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நடந்ததையொட்டி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ராமர் யாத்திரை நடத்தப்பட்டது. மும்பை மீரா சாலை பகுதியில் யாத்திரை மீது கல்வீச்சு சம்பவம் நடந்தது. இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. கல்வீச்சு தாக்குதல் நடத்தியவர்களை மும்பை போலீஸ் கைது செய்த காட்சி என்று வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Archive

இதுதொடர்பாக ஆய்வு செய்தோம். வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோவை 2022ம் ஆண்டில் பலரும் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. அதில், ஐதராபாத் போலீசார் பாஜக எம்.எல்.ஏ ராஜ்சிங்குக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்களை வீடு புகுந்து கைது செய்தனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Archive

என்டிடிவி ஊடகம் கூட இந்த வீடியோவை 2022ம் ஆண்டு பதிவிட்டிருந்தது. அதிலும் கூட பாஜக எம்.எல்.ஏ-வுக்கு எதிராக ஷாலிபண்டாவில் (Shalibanda) கூடிய போராட்டக்காரர்களுக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுத்த காட்சி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. வேறு சில ஊடகங்கள் 2022ல் வெளியிட்ட இதே வீடியோக்களும் நமக்குக் கிடைத்தன. இவை எல்லாம் இந்த வீடியோ 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் மும்பையில் எடுக்கப்பட்டது இல்லை என்பதை உறுதி செய்தன.

நம்முடைய ஆய்வில் இந்த வீடியோ ராமர் யாத்திரை மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்ட போது எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ 2022ம் ஆண்டு ஐதராபாத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மும்பையில் நடந்த ராமர் யாத்திரையில் கல்வீசியவர்களை மும்பை போலீஸ் கைது செய்த காட்சி என்று பரவும் வீடியோ பதிவு தவறானது என்று உறதி செய்யப்படுகிறது.

முடிவு:

2022ம் ஆண்டு ஐதராபாத்தில் போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்த வீடியோவை மும்பை ராமர் யாத்திரையில் கல்வீச்சில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்த வீடியோ என்று தவறாக பகிர்ந்திரப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மும்பையில் ராமர் யாத்திரை மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்ட காட்சி என்ற தகவல் உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False