நீட் தேர்வு விவகாரத்தில், ‘’தூக்கு மேடை எனக்கு பஞ்சு மெத்தை’’ என்று கி. வீரமணி பேசியதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ தூக்கு மேடை எனக்கு பஞ்சு மெத்தை. நீட் தடை செய்யவில்லை என்றால் அனிதா போன்று தற்கொலை செய்யவும் நான் தயார் என் உயிர் போனால் தான் நீட் தடை என்றால் அதற்க்கும் தயார் – மாவீரன் வீரமணி’’, என்று எழுதப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நீட் தேர்வை எதிர்த்து, திமுக, திராவிடர் கழகம் உள்ளிட்ட அரசியல் அமைப்புகள் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை தமிழ்நாட்டில் நடத்தி வருகின்றன. அந்த வரிசையில் மேற்கண்டவாறு கி.வீரமணி சவால் விட்டதாகக் குறிப்பிட்டு சிலர் தகவல் பரப்புகின்றனர். உண்மையில், இவ்வாறு அவர் எங்கேயும் பேசவில்லை. இதுபற்றி நாம் திராவிடர் கழகத்தின் வழக்கறிஞர் அணி தரப்பில் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தி தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:நீட் தேர்வு விவகாரம்: ‘தூக்கு மேடை எனக்கு பஞ்சு மெத்தை’ என்று கி. வீரமணி பேசினாரா?

Written By: Fact Crescendo Team

Result: False