டெல்லியை தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் பலர் புத்தமதம் தழுவினர் என்று கதிர் நியூஸ் கூறியதா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

‘’டெல்லியை தொடர்ந்து உத்தரப் பிரதேசத்திலும் நேற்று பலர் புத்தமதத்திற்கு மாறினர் – கதிர் நியூஸ் ,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். இதே செய்தியை பலரும் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்வதை கண்டோம். 

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:

குறிப்பிட்ட செய்தியை கதிர் நியூஸ் வெளியிடவில்லை. இதுபற்றி நாம் கதிர் நியூஸ் உரிமையாளரும் தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளருமான எஸ்.ஜி.சூர்யா அவர்களிடம் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.

மேற்கண்ட நியூஸ் கார்டில் உள்ள புகைப்படம், சமீபத்தில் டெல்லியில் எடுக்கப்பட்டதாகும்.

ஆம், டெல்லியில் கடந்த அக்டோபர் 5, 2022 அன்று அம்மாநில அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம், புத்த மதத்திற்கு மதம் மாறும் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற காரணத்தால், தனது பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது. அந்த நிகழ்வில், 10,000 பேர் புத்த மதத்தை தழுவினர். இதுபற்றி அவரே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதில் உள்ள புகைப்படத்தை எடுத்தே குறிப்பிட்ட நியூஸ் கார்டில் இணைத்து, கதிர் நியூஸ் பெயரில் வதந்தி பரப்பி வருகின்றனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:டெல்லியை தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் பலர் புத்தமதம் தழுவினர் என்று கதிர் நியூஸ் கூறியதா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: False