ராம்நாத் கோவிந்தின் வணக்கத்தை கவனிக்காமல் கேமரா பார்த்தாரா மோடி?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெறுதற்கு முன்பு நடந்த பிரிவுபச்சார விழாவில் ராம்நாத் கோவிந்த் வணக்கம் கூறிய போது அவருக்கு பதில் வணக்கம் கூறாமல் மோடி கேமராவை பார்த்துக்கொண்டிருந்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களுக்கு ராம்நாத் கோவிந்த் வணக்கம் செலுத்துகிறார். பிரதமர் மோடி கேமராமேக்களை பார்த்தபடி நிற்கிறார். பார்க்கும் போது, பிரதமர் மோடிக்கு ராம்நாத் கோவிந்த் வணக்கம் கூறுவது போலவும் ஆனால் மோடி அதை கவனிக்காதது போலவும் தெரிகிறது. நிலைத் தகவலில், “குடியரசு தலைவருக்கு இவனுங்க கொடுக்குற மரியாதை.. அது யாரு நடுவுல கேமராவ மறைக்கிறதுனு அடிக்காம விட்டானே.. அதுவே பெருசு..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை, Dr.Aravind Raja என்ற ட்விட்டர் ஐடி கொண்டவர் 2022 ஜூலை 24ம் தேதி பதிவிட்டுள்ளார்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஃபேஸ்புக்கில், இந்த வீடியோ பதிவை Carmel Anto Nellai என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 ஜூலை 24ம் தேதி பதிவிட்டுள்ளார். நிலைத் தகவலில், “குடியரசு தலைவருக்கு இவனுங்க கொடுக்குற மரியாதை இதுதான் … ‘ஜனாதிபதி’யை விட ‘புகைப்படமே’ முக்கியம். இது தான் இவர்களின் உண்மை முகம், முர்முக்கு கொடி தூக்கியவர்களுக்கு சமர்ப்பணம்” என்று குறிப்பிட்டுள்ளார். இவர்களைப் போல பலரும் இந்த வீடியோ மற்றும் தகவலை தங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

குடியரசுத் தலைவருக்கு பிரதமர் மோடி மரியாதை அளிக்கவில்லை, அவரை அவமரியாதை செய்துவிட்டார் என்பது போன்று கருத்தை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். ராம்நாத் கோவிந்த் வணக்கம் செய்யும் போது, அமைச்சர் பீயுஷ் கோயல் வணக்கம் செய்கிறார். மோடி அதை பார்ப்பது போல உள்ளது. கேமரா கோணம் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடிக்கு மரியாதை செலுத்துவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய அந்த நிகழ்வின் வீடியோவை பார்வையிட்டோம். 

நாடாளுமன்ற தொலைக்காட்சியில் அந்த வீடியோ கிடைத்தது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு எல்லாம் ராம்நாத் கோவிந்த் நன்றி கூறுகிறார். பிரதமர் மோடி அருகே வந்த போது மோடி ராம்நாத் கோவிந்துக்கு வணக்கம் கூறுகிறார். ராம்நாத் கோவிந்தும் வணக்கம் கூறுகிறார். அப்படியே நகர்ந்து பியூஷ் கோயல் அருகே வருகிறார். கோயலுக்கு பின்னால் இருந்த பெண்மணிக்கு ராம்நாத் கோவிந்த் வணக்கம் கூறுவது, பிரதமர் மோடிக்குக் கூறுவது போல உள்ளது. அதே நேரத்தில் நன்கு கவனித்தால் ராம்நாத் கோவிந்த் ஏதோ கூற அதற்கு அந்த பெண் நன்கு தலையை அசைத்து பதில் அளிப்பது போல உள்ளது. 

மேலும் குடியரசுத் தலைவர் ட்விட்டர் பக்கத்தில் இந்த விழாவின் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன. அதில், ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்துக்கொள்ளும் காட்சியும் இருந்தது. 

Archive

பிரதமர் மோடி வணக்கம் கூறிய பகுதியை விட்டுவிட்டு, வேறு நிர்வாகிகளுக்கு வணக்கம் கூறிய காட்சியை மட்டும் பகிர்ந்துள்ளனர். இது பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பதில் வணக்கம் கூறாமல் கேமராவை பார்த்தார் என்ற தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. 

நம்முடைய ஆய்வில், குடியரசுத் தலைவர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு நடந்த பிரிவுபச்சார விழாவில் பிரதமர் மோடி, ராம் நாத் கோவிந்த்துக்கு வணக்கம் கூறியது தெளிவாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் குடியரசுத் தலைவருக்கு மோடி அவமரியாதை செய்துவிட்டார் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சமையில் அறையில் திரௌபதி முர்மு அமர்ந்திருப்பதாக பகிரப்படும் படத்தில் இருக்கும் பெண் திரௌபதி முர்முவின் உறவினர் என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ராம்நாத் கோவிந்தின் வணக்கத்தை கவனிக்காமல் கேமரா பார்த்தாரா மோடி?

Fact Check By: Chendur Pandian 

Result: False