உலகின் தலை சிறந்த தலைவர் என மோடியின் தபால் தலையை வெளியிட்டதா துருக்கி?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

உலகின் தலை சிறந்த தலைவரின் நினைவாக மோடியின் தபால் தலையைத் துருக்கி வெளியிட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பிரதமர் மோடி புகைப்படத்துடன் கூடிய துருக்கி நாட்டு தபால் தலை படம் பகிரப்பட்டுள்ளது. அதனுடன் “பெருமை மிக்க தருணம் இந்த நேரத்தில் உலகின் தலைசிறந்த தலைவரின் நினைவாக நரேந்திர மோடியின் தபால் தலையைத் துருக்கி வெளியிட்டுள்ளது. இதை நினைத்து ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Soman Soman என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஏப்ரல் 25ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பிரதமர் மோடிக்கு துருக்கி அரசு தபால்தலை வெளியிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பார்க்கத் துருக்கி அரசு வெளியிட்டது போலவே உள்ளது. உலகின் தலைசிறந்த தலைவர் என்ற அடிப்படையில் மோடியின் தபால்தலை வெளியிடப்பட்டதா என்று ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: news18.com I Archive 1 I businesstoday.in I Archive 2

துருக்கி, மோடி, சிறப்புத் தபால்தலை என சில கீ வார்த்தைகளை பயன்படுத்தி கூகுளில் தேடினோம். அப்போது, 2015ம் ஆண்டு ஜி20 மாநாட்டையொட்டி இந்த ஸ்டாம்பை துருக்கி அரசு வெளியிட்டதாக செய்திகள் கிடைத்தன. துருக்கி அதிபர் படம் தவிர்த்து இதர நாடுகள், உலகத் தலைவர்கள் 33 பேரின் ஸ்டாம்பை  துருக்கி வெளியிட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

Archive

தொடர்ந்து தேடிய போது, 2015ம் ஆண்டு ஜி20 மாநாட்டையொட்டி உருவாக்கப்பட்ட துருக்கி நாட்டின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த தபால்தலை லிங்க் உடன் கூடிய பதிவு வெளியாகி இருந்தது. அதில், “ஜி20 மாநாட்டையொட்டி, மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள் படத்துடன் கூடிய சிறப்புத் தபால்தலையை அதிபர் எர்டோகன் வெளியிட்டார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

துருக்கி அரசு பிரதமர் மோடியின் தபால்தலையை வெளியிட்டது உண்மைதான். ஆனால், தலை சிறந்த தலைவர் என்பதால் மோடிக்கு தபால்தலை வெளியிடப்பட்டது என்ற தகவல் தவறானது. ஜி20 மாநாட்டில் பங்கேற்ற உலகத் தலைவர்கள் அனைவரின் படத்தையும் தனித்தனியாகத் தபால்தலையாகத் துருக்கி வெளியிட்டது உறுதியாகி உள்ளது.

முடிவு:

உலகின் தலைசிறந்த தலைவராக விளங்குவதால் மோடிக்கு தபால் தலை வெளியிட்ட துருக்கி என்று பரவும் தகவல் தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:உலகின் தலை சிறந்த தலைவர் என மோடியின் தபால் தலையை வெளியிட்டதா துருக்கி?

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False