
‘’வெறும் மைதானத்தில் ஆள் யாரும் இல்லாத சூழலில் கைகளை அசைத்துச் சென்ற மோடி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட மோடி வீடியோ எடிட் செய்யப்பட்டது என்றும், இது நம்பகமானது இல்லை என்றும் ஏற்கனவே நமது ஃபேக்ட் கிரஸண்டோ ஆங்கில பிரிவு ஆய்வு செய்து, உண்மையை வெளியிட்டுள்ளது. அந்த லிங்கை கீழே இணைத்துள்ளோம்.
சமீபத்தில் மேற்கு வங்கம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக, பிரதமர் மோடி சென்றிருந்தார். அங்குள்ள ஜெய்நகரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்க அவர் விமானத்தில் இருந்து தரையிறங்கியதும், அங்கிருந்த கூட்டத்தினரை பார்த்து கை அசைத்தார்.
இதனை பாஜக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஐடியில் ட்வீட் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதனையும் கூடுதல் ஆதாரத்திற்காக கீழே இணைத்துள்ளோம்.
எனவே, இந்த வீடியோவை எடுத்து, எடிட் செய்து, கூட்டம் இல்லாத வெறும் மைதானத்தில் அவர் கை காட்டியதாகக் கூறி சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
Fact Crescendo English News Link
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:காலியான மைதானத்தில் கை காட்டினாரா மோடி?- இது எடிட் செய்யப்பட்ட வீடியோ!
Fact Check By: Pankaj IyerResult: Altered
