
ஆப்கானிஸ்தானில் மொபைல் போன் வைத்திருந்தால் மரண தண்டனை என்று கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதுபற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வீடியோவின் ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து, ரிவர்ஸ் இமேஜ் முறையில் கூகுளில் பதிவேற்றி தேடினோம். அப்போது, இது பாகிஸ்தானைச் சேர்ந்தது என்பதற்கான சில செய்தி மற்றும் வீடியோ ஆதாரங்கள் கிடைத்தன.
The Tribune Link I The News Link I vice.com Link
மேற்கண்ட வீடியோவில் இருக்கும் அதிகாரிகளின் சீருடையில் இருக்கும் முத்திரையும், நாம் ஆய்வு செய்யும் வீடியோவில் இருக்கும் நபர்களின் சீருடை முத்திரையும் ஒத்துப் போவதைக் காண முடிகிறது.


எனவே, பாகிஸ்தான் சுங்கத் துறை சார்பாக, பறிமுதல் செய்யப்படும் போதை மருந்துகள், மொபைல்போன்கள் மற்றும் இதர சாதனங்களை அழிக்கும் நிகழ்வு தொடர்பான வீடியோவை எடுத்து, ஆப்கானிஸ்தானில் மொபைல் வைத்திருந்தால் மரண தண்டனை என வதந்தி பரப்புகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:ஆப்கானிஸ்தானில் மொபைல் போன் வைத்திருந்தால் மரண தண்டனையா?
Fact Check By: Pankaj IyerResult: Partly False
