‘அண்ணாமலை இறந்தால் அதிக கூட்டம் வரும்’ என்று அவரது ஆதரவாளர்கள் பதிவிட்டனரா?
‘’அண்ணாமலை இறந்தால் அதிக கூட்டம் வரும்,’’ என்று அவரது ஆதரவாளர்கள் பதிவிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஏராளமானோர் திரண்டதால், சென்னை முழுக்க மக்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 15 லட்சம் பேர் அவரது இறுதி யாத்திரையில் பங்கேற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த சூழலில், விஜயகாந்திற்கு வந்த கூட்டத்தை விட அதிக கூட்டம் அண்ணாமலை இறந்தால் வரும் என்று அவரது ஆதரவாளர்கள் X வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாக, மேற்கண்ட வகையில் சிலர் தகவல் பரப்புகின்றனர்.
ஆனால், இது அண்ணாமலை ஆதரவாளர்களை கேலி செய்யும் நோக்கில் செயல்படும் ஒரு parody account ஆகும்.
கூடுதல் ஆதாரத்திற்காக, பாஜக ஐடி பிரிவில் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.
ஏற்கனவே நாம் இந்த account பற்றி செய்தி வெளியிட்டிருக்கிறோம்.
எனவே, அண்ணாமலை ஆதரவாளர்கள் என்ற பெயரில் parody account பகிர்ந்த பதிவை உண்மை என நம்பி, வதந்தி பரப்புகின்றனர் என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
Title:‘அண்ணாமலை இறந்தால் அதிக கூட்டம் வரும்’ என்று அவரது ஆதரவாளர்கள் பதிவிட்டனரா?
Written By: Fact Crescendo TeamResult: False