
A4 குற்றவாளியாக ராஜ் மோகன் பெயர் சேர்ப்பு என்று புதிய தலைமுறை தொலைக்காட்சி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ்கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “A4 குற்றவாளியாக ராஜ்மோகன் பெயர் சேர்ப்பு! கரூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சிபிஐ முதல் தகவல் அறிக்கையில் மாவட்ட செயலாளர் மதியழகன், புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் பெயர்களைத் தொடர்ந்து தவெக துணைப் பொதுச்செயலாளர் ராஜ்மோகன் பெயரும் A4 ஆக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல். ஆதவ் அர்ஜூனன் பெயர் இல்லாததால், அவர் பாஜகவிடம் விலை போய்விட்டார் என்று தவெகவினர் விமர்சனம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை சி.பி.ஐ விசாரித்து வருகிறது. வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையை நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அது தொடர்பான விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில் சில ஊடகங்கள் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் தொடர்பாக பிரத்தியேக செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதில் எவ்வளவு உண்மை என்பது முதல் தகவல் அறிக்கை வெளியான பிறகுதான் தெரியவரும்.
இந்த நிலையில் ராஜ் மோகன் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதாக நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. கரூர் சம்பவத்திற்குப் பிறகு தமிழகக் காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் ராஜ்மோகன் பெயர் இல்லை. ஆனாலும் அவரும் தலைமறைவாகவே இருப்பதாக சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் அவரது பெயர் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் ஆதவ் அர்ஜூனா பெயர் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நியூஸ் கார்டில் ஆதவ் அர்ஜூனா பெயர் ஆதவ் அர்ஜூனன் என்று தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழ் பாஃண்டும் வழக்கமாக புதிய தலைமுறை வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ளது போல் இல்லை. எனவே, இந்த நியூஸ் கார்டு தொடர்பாக ஆய்வு செய்தோம். புதிய தலைமுறை 2025 அக்டோபர் 24ம் தேதி வெளியிட்டிருந்த நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். ஆனால், அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிடவில்லை என்பது தெரியவந்தது.

உண்மைப் பதிவைக் காண: puthiyathalaimurai.com I Archive
இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை டிஜிட்டல் பொறுப்பாளருக்கு அனுப்பி இது உண்மையா என்று கேட்டோம். அவரும் இது போலியானது என்று குறிப்பிட்டு, இது தொடர்பாக புதிய தலைமுறையில் வெளியான பதிவை நமக்கு அனுப்பினார். இதன் மூலம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பது உறுதியானது.
முடிவு:
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கில் 4வது குற்றவாளியாக ராஜ் மோகன் பெயரை சேர்த்தது சி.பி.ஐ என்று பரவும் புதிய தலைமுறை நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:“A4 குற்றவாளியாக ராஜ் மோகன் பெயர் சேர்ப்பு” என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False


