பசியால் கோயிலில் அசைவம் சாப்பிட்டதை வைத்து அரசியல் செய்யாதீர் என்று சேகர் பாபு கூறினாரா?

அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

‘’பசியால் கோயிலில் அசைவம் சாப்பிட்டதை வைத்து அரசியல் செய்யாதீர்’’, என்று சேகர் பாபு கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ அமைச்சர் பதிலடி. பசியால் கோயிலில் அசைவம் சாப்பிட்டதை வைத்து அரசியல் செய்யாதீர். சங்கிகள் கண்ணப்ப நாயனார் வரலாற்றை படியுங்கள்.,” என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் சேகர் பாபு படமும் இணைக்கப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 

சன் நியூஸ் லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா, என்று தகவல் தேடினோம். அப்போது, இது சன் நியூஸ் பெயரில் பகிரப்படும் போலியான செய்தி, என்று தெரியவந்தது. 

இதுதொடர்பாக, நாம் சன் நியூஸ் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி மற்றும் அமைச்சர் சேகர் பாபு அலுவலகத்தை தொடர்புகொண்டு பேசி, உறுதிப்படுத்தியுள்ளோம். 

சமீபத்தில், திருவண்ணாமலை கோயிலுக்குள்ளே ஒருவர் அசைவ உணவு சாப்பிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் அடிப்படையில் வேண்டுமென்றே இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பெயரில் இத்தகைய வதந்தியை சிலர் வேண்டுமென்றே பரப்புவதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:பசியால் கோயிலில் அசைவம் சாப்பிட்டதை வைத்து அரசியல் செய்யாதீர் என்று சேகர் பாபு கூறினாரா?

Written By: Pankaj Iyer  

Result: False

Leave a Reply