‘’வயநாடு நிலச்சரிவுக்கு முன்பே மலையை விட்டு வெளியேறிய யானைகள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ ஏதோ பேரழிவு ஏற்படும் முன் இயற்கையின் அழைப்பின் பேரில் மலையிலிருந்து இறங்கி பாதுகாப்பான இடத்திற்கு செல்லும் யானைக்கூட்டம்… மனிதன் இந்த ஞானத்தை இழந்துவிட்டான்…,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கடந்த ஜூலை 30, 2024 அன்று கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக, சமூக வலைதளங்களில் பலவிதமான வதந்திகள் பரவின. அவை பற்றி நாமும் அவ்வப்போது ஃபேக்ட்செக் செய்து, கட்டுரை வெளியிட்டுள்ளோம்.

அந்த வரிசையில் பகிரப்படும் மற்றொரு வதந்திதான் மேற்கண்ட யானைகள் கூட்டம் வயநாட்டில் இருந்து வெளியேறிய காட்சி என்ற தகவலும்…

ஆம், வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது ஜூலை 30, 2024 அன்று.. ஆனால், இந்த யானைகள் கூட்டமாகச் செல்லும் வீடியோ அதற்கும் முன்பாக, ஜனவரி மாதம் முதலே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Instagram link 1 l link 2

எனவே, ஜனவரி மாதம் எடுக்கப்பட்ட வீடியோவை எடுத்து, ஜூலை மாதம் நிகழ்ந்த நிலச்சரிவுடன் தொடர்புபடுத்தி வதந்தி பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘வயநாடு நிலச்சரிவுக்கு முன்பே வெளியேறிய யானைகள்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Fact Crescendo Team

Result: False