பெரியாரை புரிந்து கொள்ளாத எந்த இந்துவும் ஞானமடைய முடியாது என்று சுகிசிவம் கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

பெரியாரைப் புரிந்துகொள்ளாத எந்த இந்துவும் ஞானம் அடைய முடியாது என்று பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் சுகி சிவம் கூறியதாக பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சுகி.சிவம் மற்றும் தந்தை பெரியார் ஆகியோர் படங்களை இணைத்து புகைப்பட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “பெரியாரைப் புரிந்து கொள்ளாத எந்த ஹிந்துவும் ஞானமடைய முடியாது! – சுகி.சிவம்” என்று போட்டோஷாப் முறையில் எழுதப்பட்டிருந்தது. இந்த பதிவை Durai Raj என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 மார்ச் 24ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே ஒரு முறை சுகி சிவத்துடன் மேற்கொண்ட நேர்காணலின் போது, இந்து மதத்துக்கு எதிரான பெரியாரை நீங்கள் ஏற்று கொண்டாடும் போது என்று குறிப்பிட்டார். உடனே குறுக்கிட்ட சுகிசிவம், “பெரியாரின் எந்த கருத்தை என்று சொல்லுங்கள், பெரியாரை ஏற்றுக் கொண்டாடினேன் என்று மொட்டையாக சொல்லாதீர்கள்” என்று மறுப்பு கூறினார். மேலும், “எந்த ஒரு மனிதனையும் முழுமையாக ஏற்றுக் கொண்டாடுவதும் இல்லை. அதே நேரத்தில் முழுமையாக எதிர்ப்பதும் இல்லை. சமூகத்தில் ஜாதி வேறுபாடு வேண்டாம் என்ற பெரியாரின் கருத்தை ஏற்கிறேன்” என்று கூறியிருந்தார். இந்த நிலையில் பெரியாரைப் புரிந்துகொள்ளாத எந்த இந்துவும் ஞானம் அடைய முடியாது என்று சிகி.சிவம் கூறியதாக பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் தேடிய போது பெரியார் தொடர்பாக சுகி.சிவம் பேசிய வீடியோ ஒன்று கிடைத்தது. அதில், “இரண்டு பேரையும் சரியான இடத்தில் இருந்து பார்த்தால்தான் இவர்கள் இரண்டு பேரும் சமூகத்துக்கு ஏன் தேவை என்பது புரியும். நல்லொழுக்கம், ஞானம், தவம் இந்த உலகில் வேரூன்றுவதற்கு ஒரு காஞ்சி பெரியார் தேவைப்படுகிறார். அதே காலகட்டத்தில் மதம் என்ற பெயரால் ஜாதி ஆதிக்கம் மேலோங்குவதைத் தடுப்பதற்கு, சமூக நீதியை கேட்பதற்கு ஈரோட்டுப் பெரியார் தேவைப்படுகிறார்.

என்னுடைய வீட்டு நூலகத்தில் மேலே காஞ்சி பெரியவரின் தெய்வத்தின் குரல் புத்தகம் வைத்துள்ளேன். அதே வரிசையில் ஈ.வே.ரா பெரியார் சிந்தனைகள் புத்தகமும் வைத்துள்ளேன். என்னைப் பொறுத்தவரையில் எனக்குத் தெரியும், நான் ஒரு தராசு வைத்திருக்கிறேன். அதில் சமமான தட்டில் காஞ்சி பெரியவரும் இருக்கிறார், ஈரோட்டுப் பெரியாரும் இருக்கிறார். இதை புரிந்துகொள்ளாத வரையில் சமூகத்தில் மனிதன் ஞானம் அடைய முடியாது” என்று அவர் பேசியிருந்தார். 

காஞ்சி மஹா பெரியவரையும், ஈரோடு பெரியாரையும் அவரவர் இடத்தில் இருந்து அவரவர் செய்த காரியங்களை பார்த்தால் புரிந்துகொள்ள முடியும் என்ற அர்த்தத்தில் அவர் பேசியிருப்பதை காண முடிந்தது. 

பெரியாரைப் புரிந்துகொள்ளாத எந்த இந்துவும் ஞானம் அடைய முடியாது என்று சுகி சிவம் புதிதாக சமீபத்தில் பேசினாரா என்று தேடிப் பார்த்தோம். அப்படி எந்த ஒரு வீடியோவும் நமக்கு கிடைக்கவில்லை. அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் சுகி.சிவம் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “என் படத்தையும் பெரியார் அவர்கள் படத்தையும் போட்டு நான் சொல்லாத வாசகத்தைப் போட்டு ஃபேஸ்புக்கில் ஒரு செய்தி உலா வருகிறது. அது பொய் – சுகிசிவம்” என்று இருந்தது.

இதன் மூலம் பெரியாரைப் புரிந்துகொள்ளாத எந்த இந்துவும் ஞானமடைய முடியாது என்று சுகிசிவம் கூறியதாக பரவும் போஸ்டர் போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

திமுக-வில் இருந்து கனிமொழி விலகப் போவதாக வெளியான நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பெரியாரை புரிந்து கொள்ளாத எந்த இந்துவும் ஞானமடைய முடியாது என்று சுகிசிவம் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False