
‘’ஜனவரி 6ம் தேதி தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’தமிழ்நாட்டில் 1-12ஆம் வகுப்பு ஜனவரி 6 தேதி பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு. மகிழ்ச்சியான செய்தி. அமைச்சர் மாணவர்களுக்கு அறிவிப்பு’’ என்று எழுதப்பட்டுள்ளது.
தந்தி டிவி லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட நியூஸ் கார்டு உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். முதலில், இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். ‘’இவ்வாறு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை,’’ என்று தெரிவித்தனர்.
அடுத்தப்படியாக, தந்தி டிவி ஆசிரியர்கள் குழுவை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘’எங்களது பெயரில் இதுபோன்று போலியான நியூஸ் கார்டை உருவாக்கி, சமூக வலைதளங்களில் சிலர் பரப்புகின்றனர். இதனை நாங்கள் வெளியிடவில்லை,’’ என்று மறுப்பு தெரிவித்தனர்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு போலியான ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:ஜனவரி 6ம் தேதி தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதா?
Written By: Pankaj IyerResult: False
