
‘‘கர்நாடகா சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்குச் சென்ற பாஜக வாகனத்தை பொதுமக்கள் தாக்கினார்கள்’’, என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வீடியோவை கவனித்தபோது, பொதுமக்கள் என கூறப்படும் நபர்களில் சிலர் கையில் TRS (தற்போது BRS) கட்சிக் கொடி ஏந்தியிருப்பதைப் பார்த்தோம். மேலும், சிலர் தோளில் அக்கட்சித் துண்டு அணிந்திருப்பதையும் பார்த்தோம்.

உதாரணத்திற்கு, TRS கட்சி தொண்டர்கள் எப்படி இருப்பார்கள் என்று காட்ட ஒரு புகைப்படத்தைக் கீழே இணைத்துள்ளோம்.

எனவே, இதன்பேரில் தொடர்ந்து நாம் தகவல் தேடியபோது, தெலுங்கானா மாநிலத்தில் பாஜக பிரசார வாகனத்தை தாக்கிய TRS தொண்டர்கள் என்று கூறி ஏற்கனவே வெளியான ஒரு செய்தியை கண்டோம்.
இதுதவிர, ஏஎன்ஐ ஊடகம் வெளியிட்ட செய்தி ஒன்றையும் காண நேரிட்டது. அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.
இதன்படி, 2022ம் ஆண்டு தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் ஒன்றின்போது, பாஜக மற்றும் TRS கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது பாஜக.,வின் பிரசார வாகனம் ஒன்றும் தாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவை எடுத்தே, கர்நாடகா சட்டமன்ற தேர்தலுடன் தொடர்புபடுத்தி பலரும் தற்போது பகிர்ந்து வருகின்றனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:கர்நாடகா சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்குச் சென்ற பாஜக வாகனத்தை பொதுமக்கள் தாக்கினார்களா?
Fact Check By: Fact Crescendo TeamResult: False
