
‘’உலகின் சிறந்த தலைவர் மோடி’’ என்று கூறி துருக்கி அரசு தபால் தலை வெளியிட்டதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ பெருமை மிக்க தருணம்
இந்த நேரத்தில் உலகின்
தலைசிறந்த தலைவரின் நினைவாக நரேந்திர மோடியின் தபால் தலையை
துருக்கி வெளியிட்டுளளது. இதை நினைத்து ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டும்.’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தபால் தலை படம் பார்ப்பதற்கு, உண்மை போன்றே உள்ளது. எனவே, இதுபற்றி தகவல் தேடினோம். அப்போது, கடந்த 2015ம் ஆண்டு G20 மாநாடு துருக்கி நாட்டில் நடைபெற்றது. அதனை முன்னிட்டு, துருக்கி அரசு சார்பாக, இத்தகைய சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டதாக விவரம் கிடைத்தது.
ஆனால், இதில் மோடி மட்டுமல்ல; G20 மாநாட்டில் பங்கேற்கும் நாடுகளின் தலைவர்களது புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளதைக் கண்டோம்.

எனவே, மோடி உள்பட G20 நாடுகளின் தலைவர்களது புகைப்படங்களை வைத்து, ஒவ்வொருவருக்கும் துருக்கி அரசு தபால் தலைகளை வெளியிட்டுள்ளதாக, தெரியவருகிறது. ஆனால், மோடி மட்டுமே உலகின் சிறந்த தலைவர் என்று குறிப்பிட்டு, துருக்கி அரசு சிறப்பு தபால் தலை வெளியிட்டதாகப் பரவும் தகவல் தவறானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:‘உலகின் சிறந்த தலைவர் மோடி’ என்று கூறி துருக்கி அரசு தபால் தலை வெளியிட்டதா?
Written By: Fact Crescendo TeamResult: Missing Context
