காலில் செருப்பு அணிய மாட்டேன் என்று சொன்னதை மறந்துவிட்டாரா அண்ணாமலை?

அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

‘’காலில் செருப்பு அணிய மாட்டேன் என்று சொன்னதை மறந்துவிட்ட அண்ணாமலை,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ அண்ணாமலையின் போலி நாடகம் அம்பலம்! திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என அண்ணாமலை கூறியிருந்த நிலையில் தற்போது செருப்பு அணிந்து சுற்றுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது!

#KAnnamalai #BJP #DMK #MKStalin #FakePolitician ,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

இதனுடன், அண்ணாமலையின் புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3     

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட புகைப்படம் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் எடுக்கப்பட்ட ஒன்று, என தெரியவந்தது. 

X Post Link 1 l X Post Link 2 

ஆனால், திமுக., ஆட்சியை அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன், என்று அண்ணாமலை சபதம் எடுத்துக் கொண்டது 2024ம் ஆண்டு இறுதியில்தான்…

சொன்னதுபோலவே, இன்றளவும் அண்ணாமலை செருப்பு அணியாமல்தான் பொது இடங்களில் நடமாடுகிறார். 

இதுபோன்று ஏராளமான புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களை அண்ணாமலையின் அதிகாரப்பூர்வ X வலைதள பக்கத்தில் காண முடிகிறது. 

கடந்த பிப்ரவரி 21, 2025 அன்று வாரணாசியில் உள்ள பாபா விஸ்வநாத் நகரில் நடைபெற்ற ‘காசி தமிழ் சங்கமம் 3.0’ நிகழ்ச்சியில் கூட, அண்ணாமலை தனது காலில் செருப்பு போடாமல்தான் பங்கேற்றார். 

அண்ணாமலையின் சபதம் பற்றி அவ்வப்போது திமுக ஆதரவாளர்கள் வேண்டுமென்றே வதந்தி பரப்புவது வழக்கமாக உள்ளது. சில வாரங்களுக்கு முன்பு கூட அண்ணாமலை ஷூ அணிந்ததாக, ஒரு தகவல் பகிரப்பட்டது. அதுபற்றி நாமும் ஃபேக்ட்செக் செய்திருந்தோம். 

Fact Crescendo Tamil Link 

இந்த வரிசையில் திமுக ஆதரவாளர்கள் பகிரும் மற்றொரு வதந்திதான், தற்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் பற்றிய தகவலும்…

எனவே, 2022ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தை தற்போது பகிர்ந்து, வேண்டுமென்றே அண்ணாமலை பற்றி வதந்தி பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:காலில் செருப்பு அணிய மாட்டேன் என்று சொன்னதை மறந்துவிட்டாரா அண்ணாமலை?

Written By: Pankaj Iyer  

Result: False