‘நான் முதல்வரானால் எச். ராஜாவுக்கு முக்கிய பதவி’ என்று சீமான் கூறினாரா?

அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

‘’நான் முதல்வரானால் அப்பா எச் ராஜாவுக்கு முக்கிய பதவி கொடுத்து அழகு பார்ப்பேன்’’, என்று சீமான் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ நான் முதல்வரானால் எச். ராஜாவுக்கு முக்கிய பதவி! பெரியாரின் சூழ்ச்சியால் தான் எச் ராஜா போன்ற பேரறிஞர்கள் தமிழ்நாட்டின் முதல்வராக முடியவில்லை! நான் முதல்வரானால் அப்பா எச் ராஜாவுக்கு முக்கிய பதவி கொடுத்து அழகு பார்ப்பேன் – ஈரோடு தேர்தல் பரப்புறையின் போது சீமான் பேச்சு’’, என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3     

News 7 Tamil லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட நியூஸ் கார்டு உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டு என்று தெரியவந்தது. இதுபற்றி News7 Tamil ஊடகத்தின் டிஜிட்டல் பிரிவு நிர்வாகியிடம் கேட்டபோது, ‘’இது எங்களது பெயரில் பகிரப்படும் போலியான செய்தி,’’ என்று தெரிவித்தார். 

மேலும், News7 Tamil ஃபேஸ்புக் பக்கத்திலும் இதுதொடர்பாக விளக்கம் அளித்து பதிவு ஒன்றை வெளியிட்டனர். கூடுதல் ஆதாரத்திற்காக, அதனையும் கீழே இணைத்துள்ளோம். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு போலியானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:‘நான் முதல்வரானால் எச். ராஜாவுக்கு முக்கிய பதவி’ என்று சீமான் கூறினாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False