
‘’அண்ணாமலை ஒழிக என்று கூச்சலிடும் முன்னாள் பாஜக தலைவர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ அண்ணாமலை ஒழிக என்று கூச்சலிடும் முன்னாள் பாஜக தலைவர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.
இதனை பலரும் உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது தமிழிசை கோஷமிட்டதை தவறாகப் புரிந்துகொண்டு, எதிர்க்கட்சிகள் பரப்பும் வதந்தி, என்று தெரியவந்தது.
இதன்படி, அண்ணா பல்கலை மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, திமுக.,வை கண்டித்து, பாஜக சார்பாக, சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழிசை உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அப்போது, ‘அடக்குமுறை ஒழிக’ என்று தமிழிசை கோஷமிடுகிறார்; அவருக்குப் பின்னால் நிற்கும் பெண் ஒருவரும் எதோ கோஷமிடுகிறார். இதனால், தமிழிசை பேசுவது சரியாகக் கேட்கவில்லை.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ பற்றிய தகவல் தவறானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
