நாம் தமிழர் கட்சி சார்பாக ‘பாலியல் இழப்பீடு பாசறை’ தொடங்கப்பட்டதா?

அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

‘’நாம் தமிழர் கட்சி சார்பாக ‘பாலியல் இழப்பீடு பாசறை’ தொடங்கப்பட்டுள்ளது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ நாதக வாட்ஷப் குரூப்பில் புது குரூப்.. பாலியல் இழப்பீடு பாசறை!!! ,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2    

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று பார்த்தபோது, இவ்வாறு ‘பாலியல் இழப்பீடு பாசறை’ என்று எதுவும் புதியதாக தொடங்கப்படவில்லை, என்று தெரியவந்தது. 

அடுத்தப்படியாக, அக்கட்சியின் மூத்த நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் தரப்பில் கேட்டபோது, ‘’ திமுக.,வினர் இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற வதந்திகளை வேண்டுமென்றே பரப்புகிறார்கள்,’’ என்று விளக்கம் தரப்பட்டது.  

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:நாம் தமிழர் கட்சி சார்பாக ‘பாலியல் இழப்பீடு பாசறை’ தொடங்கப்பட்டதா?

Written By: Pankaj Iyer  

Result: False