
‘’இந்திய தொழிலாளர்கள் அனைவரையும் வெளியேற்றுவோம்,’’ என்று ஓமன் இளவரசி எச்சரிக்கை வெளியிட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ இதுபோன்ற சவுதி அரசாங்கமும் பெட்ரோலை நிறுத்துவோம் என்று கூறினால் இந்தியா பிச்சை எடுக்கும் நாடாக மாறிவிடும் வாய் திறக்குமா சவுதி அரசாங்கம்… எச்சரிக்கை! முஸ்லிம்களின் துண்புறுத்தலை இந்திய அரசு நிறுத்தவில்லை என்றால்… ஓமானிலுள்ள 1 மில்லியன் இந்திய தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவார்கள்! – ஓமான் இளவரசி எச்சரிக்கை,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனை பலரும் உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு செய்தோம். அப்போது, இது கடந்த 2020ம் ஆண்டு முதல் பகிரப்பட்டு வரும் வதந்தி என தெரியவந்தது.
இதன்படி, 2020ம் ஆண்டு ஓமன் இளவரசி Mona Al Said பெயரிலான போலி X கணக்கு ஒன்றில் இருந்தே இவ்வாறு பதிவு பகிரப்பட்டது. இது பல்வேறு தரப்பிலும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக அப்போதே இதற்கு மறுப்பு தெரிவித்து, Mona Al Said அவரது அதிகாரப்பூர்வ X வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
இதன்மூலமாக, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் உண்மையல்ல, என்று தெளிவாகிறது.
அடுத்தப்படியாக, ஓமன் இளவரசி Mona Al Said இவ்வாறு விளக்கம் அளித்ததும், ஓமன் நாட்டிற்கான அப்போதைய இந்திய தூதர் Amb Munu Mahawa நன்றி தெரிவித்து, X வலைதள பக்கத்தில் பதிவு வெளியிட்டதையும் கண்டோம். அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.
இந்த விவகாரம் பற்றி அப்போதே பல்வேறு ஊடகங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது.
IBTimes l Times Now News l Hindustan Times
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல், கடந்த சில ஆண்டுகளாகவே சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வதந்தி, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:இந்திய தொழிலாளர்கள் அனைவரையும் வெளியேற்றுவோம் என்று ஓமன் இளவரசி எச்சரித்தாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
