உத்தரப் பிரதேசத்தில் பாலியல் சீண்டல் செய்த அப்துல் கைது என்று பரவும் வீடியோ உண்மையா?

அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

‘’உத்திரப் பிரதேசத்தில் பாலியல் சீண்டல் செய்த அப்துல் கைது’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ உத்திரபிரதேசத்தில் அப்துல் என்பவன் அவளியாக வரும் பள்ளி சிறுமிகளிடம் பாலியல் சீண்டல் சீண்டி வந்தவனை பொறிவைத்து பிடித்தது உ.பி போலீஸ்.,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2  

இதனை பலரும் உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். வீடியோ காட்சிகளை ஃபிரேம் முறையில் பிரித்தெடுத்து, ஒன்றன் பின் ஒன்றாக, கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இதுதொடர்பாக நமக்கு இரண்டு வெவ்வேறு செய்திகளின் லிங்க் கிடைத்தது. 

இதேபோன்று நமக்குக் கிடைத்த மற்றொரு வீடியோ ஆதாரத்தையும் கீழே இணைத்துள்ளோம். 

https://www.facebook.com/share/r/1C3pEQxDmk

இதன்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோவில் இடம்பெற்றுள்ள காட்சிகள் 2 வெவ்வெறு சம்பவங்களை சார்ந்ததாகும். முதலில், இருசக்கர வாகனத்தில் வரும் 2 இளைஞர்கள், சாலையோரம் நடந்து செல்லும் இளம் பெண்களை பின்தொடர்ந்து சென்று, சில்மிஷம் செய்யும் காட்சிகள், மகாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ந்த ஒரு பாலியல் குற்ற சம்பவம் தொடர்பானதாகும். இளம்பெண்களிடம் சில்மிஷம் செய்த அந்த 2 இளைஞர்களும் முஸ்லீம்கள்தான்; அவர்களை போலீசார் கைது செய்துவிட்டனர். 

அடுத்தப்படியாக, போலீசார் ஒன்று சேர்ந்து, ஒரு நபரை அடித்து, ஊர்வலமாக இழுத்துச் செல்வது போன்ற காட்சிகள், மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த ஒரு கொலைக்குற்றம் தொடர்பானதாகும். 

மத்தியப் பிரதேசத்தில் உள்ள நரசிங்பூர் பகுதியை சேர்ந்த மதுர் சௌராசியா, அதே பகுதியை சேர்ந்த விகாஸ் என்பவரிடம் ரூ.40,000 கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை திருப்பித் தராமல் மதுர் இழுத்தடிக்கவே, ஆத்திரமடைந்த விகாஸ் அவரை கொலை செய்துள்ளார். இதையடுத்து, போலீசார் விகாஸ் மீது வழக்குப் பதிந்து, அவரை அடித்து இழுத்துச் சென்றனர். 

எனவே, மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் நடந்த வெவ்வேறு சம்பவங்கள் தொடர்பான 2 வீடியோக்களை ஒன்று சேர்த்து, ஒரே சம்பவம் போல சித்தரித்து, உத்தரப்பிரதேசத்தில் பாலியல் சீண்டல் செய்த அப்துல் கைது என்று வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள், என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:உத்தரப் பிரதேசத்தில் பாலியல் சீண்டல் செய்த அப்துல் கைது என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Pankaj Iyer 

Result: False