
‘’சாக்கடையில் விழுந்த ரேஷன் அரிசி மூட்டைகளை விநியோகிக்கும் தமிழக அரசு,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +919049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதே பதிவை சிலர் ஃபேஸ்புக்கில் பகிர்வதையும் கண்டோம்.
Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வீடியோவில் ஒரு ஃபிரேமை மட்டும் பிரித்தெடுத்து, ரிவர்ஸ் இமேஜ் முறையில் கூகுளில் தேடியபோது, இது கடந்த 2017ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என தெரியவந்தது.

முழு வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
சாலையோரம் ஏற்பட்ட சாக்கடை பள்ளத்தில் ரேஷன் அரிசி மூட்டைகளை அடுக்கி அதன் மீது லாரியை ஏற்றி, பள்ளத்தை கடந்த பிறகு, மீண்டும் அதே ரேஷன் அரிசி மூட்டைகளையும், கீழே கொட்டிய அரிசியையும் எடுத்து, லாரியில் போட்டுக் கொண்டு செல்கிறார்கள். இந்த வீடியோ 2017ல் அதிமுக ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்டதாகும். இதனை 2022ல் நிகழ்ந்ததைப் போல சிலர் பகிர்வதால், சமூக வலைதளங்களில் திடீர் குழப்பம் எழுந்துள்ளது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:சாக்கடையில் விழுந்த ரேஷன் அரிசி மூட்டைகள்- 2017ல் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது பரவுவதால் சர்ச்சை…
Fact Check By: Pankaj IyerResult: Missing Context
