
மத்திய அரசின் ரூ.29க்கான பாரத் அரிசியை இஸ்லாமியர்கள் வாங்கிச் செல்வது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இஸ்லாமியர்கள் தங்கள் வாகனத்தின் பின்புறம் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் கூடிய மூட்டை ஒன்றைத் தொங்கவிட்டு செல்வது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “29ரூபாயில் பாரத் அரிசி மத்திய அரசு தொடங்கியுள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தைப் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மத்திய அரசு சமீபத்தில் ரூ.29க்கு விற்பனையாகும் வகையில் பாரத் அரிசியை அறிமுகம் செய்தது. இதை கடைகளில் வாங்கிக்கொள்ளலாம் என்று மத்திய அரசு கூறியிருந்தது. 5 மற்றும் 10 கிலோ பைகளில் விற்பனையாகும் அரிசியை இஸ்லாமியர் ஒருவர் வாங்கிச் செல்வது போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது.

உண்மைப் பதிவைக் காண: 9gag.com I Archive
பாரத் அரிசி விற்பனை செய்யப்படுவதன் புகைப்படமா இது என்று மட்டும் ஆய்வு செய்தோம். இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். 2022ம் ஆண்டிலிருந்து இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. ஆனால், அந்த மூட்டையில் ரூ.29 என்று மட்டும் இல்லை.

பாரத் அரிசி மூட்டையின் புகைப்படம் எப்படி உள்ளது என்று தேடிப் பார்த்தோம். பல செய்தி ஊடகங்களிலும் பாரத் அரிசி மூட்டையின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தனர். ஆனால், அவற்றில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இல்லை. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பாரத் அரிசி என்று எழுதப்பட்டு ரூ.29 என்று பெரிய அளவில் வரையப்பட்டிருந்தது.

இந்த மூட்டை புகைப்படம் தொடர்பாக தொடர்ந்து ஆய்வு செய்த போது, 2021ம் ஆண்டில் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டிருந்த புகைப்படம் ஒன்றில் மக்கள் கைகளில் இந்த மூட்டை இருந்ததைக் காண முடிந்தது. பிரதம மந்திரி கரிப் அண்ணா கல்யாண் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் 2021ம் ஆண்டைச் சார்ந்ததாக இருக்கலாம் என்று தெரிந்தது.
ரூ.29க்கு பாரத் அரிசி திட்டம் 2024ல் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் 2022ல் இருந்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்துள்ளது. இந்த புகைப்படம் தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளத்திலும் கட்டுரை வெளியாகி உள்ளது. அதைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் உண்மையானது இல்லை, எடிட் செய்யப்பட்டது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பாரத் அரிசியை வாங்கிச் செல்லும் இஸ்லாமியர்கள் என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:பாரத் அரிசி வாங்கிச் செல்லும் இஸ்லாமியர்கள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Written By: Chendur PandianResult: Altered

This Facebook page named “Drama King” is regularly posting explicit deep-fake pictures of actress Sai Pallavi, which are going super viral on Facebook. This picture alone has 70,000 likes (link below). Shockingly, if you read comments, many think it’s real Sai Pallavi’s picture. . Thousands of women are affected by these scammers, who use explicit AI images to destroy their lives. I request that you do a fact-check on this to educate gullible people who believe its real. Thanks in advance. Link to that Post:
https://www.facebook.com/photo.php?fbid=706108584973156&set=pb.100067220618609.-2207520000&type=3