
‘’மு.க.ஸ்டாலினுக்கு பன்றி சிலையை பரிசாக வழங்கும் தெலுங்கர்கள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ மு க ஸ்டாலினுக்கு தெலுங்கர்கள் பன்றி சிலை வழங்குகிறார்கள் , ஏன் தெரியுமா நமது விஜயநகர பன்றி கொடிய ஆட்சியை திராவிட மாடல் என்று உருட்டி நீதானய்யா ஆளுகின்றீர்கள்
தமிழனை ஏமாற்றி ஆள்வதில் நீங்கள் திறமைசாலி என்று பாராட்டி பன்றி சிலையை வழங்கி இருக்கின்றனர்,” என்று எழுதப்பட்டுள்ளது.
சன் நியூஸ் லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா, என்று தகவல் தேடினோம். அப்போது, இது ஒரு எடிட் செய்யப்பட்ட புகைப்படம், என்று தெரியவந்தது.
இதுதொடர்பாக, சன் நியூஸ் வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டு வேறொன்றாக உள்ளது. இதனை எடுத்து, வேண்டுமென்றே எடிட் செய்து, மு.க.ஸ்டாலின் பெயரில் வதந்தி பரப்புகிறார்கள் என்று தெளிவாகிறது.
உண்மையான நியூஸ் கார்டையும், நாம் ஆய்வு செய்யும் புகைப்படத்தையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம்.
இறுதியாக, சன் நியூஸ் டிஜிட்டல் பிரிவு நிர்வாகியிடமும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம், எடிட் செய்யப்பட்டது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram
