‘’ ஆளுநர் மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் அரசியல் பேசக்கூடாது,’’ என்று அண்ணாமலை கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

கதிர் நியூஸ் லோகோவுடன் உள்ள இதில் ‘’ அண்ணாமலை காட்டம். ஆளுநர்களும் ஒன்றிய அமைச்சர்களும் தமிழ்நாட்டில் அரசியல் பேசினால் பிறகு மாநில பாஜக எதற்கு? செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை காட்டமான கேள்வி,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகினர். அடுத்த சில நாட்களிலேயே, தென் மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது.

இதற்கிடையே தமிழ்நாடு அரசுக்கு உரிய வெள்ள நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று ஆளுங்கட்சியான திமுக வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக, உதயநிதி ஸ்டாலின் மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடையே கடும் வார்த்தைப் போர் ஏற்பட்டுள்ளதும் இங்கே குறிப்பிட வேண்டிய விசயம்.

Hindu Tamil Link l Tamil One India Link

இந்த விவகாரம் தொடர்பாக, பாஜக மூத்த தலைவர் மற்றும் தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசிய கருத்தும் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Dinamani Link l Indian Express Link

இதையடுத்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தியில் உள்ளதுபோன்ற கருத்து தெரிவித்ததாகச் சிலர் தகவல் பரப்புகின்றனர். ஆனால், இவ்வாறு அவர் எதுவும் பேசவில்லை.

இதுபற்றி நாம் பாஜக ஐடி பிரிவு மற்றும் கதிர் நியூஸ் ஊடகம் தரப்பில் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.

எனவே, அண்ணாமலை பெயரில் சிலர் வேண்டுமென்றே வதந்தி பரப்புகின்றனர் என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:ஆளுநர் மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் அரசியல் பேசக்கூடாது என்று அண்ணாமலை கூறினாரா?

Written By: Fact Crescendo Team

Result: False