கணிதப் பாடத்தில் சிலுவைக் குறியீடு; இந்துக்கள் படிக்கக்கூடாது என்று அர்ஜூன் சம்பத் கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’கணிதப் பாடத்தில் சிலுவைக் குறியீடு உள்ளதால், இந்துக்கள் அதனை படிக்கக்கூடாது என்று அர்ஜூன் சம்பத் கூறினார்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் நகைச்சுவைக்காகப் பகிரப்படுவதைப் போல தோன்றினாலும், உண்மையில், இப்படி அர்ஜூன் சம்பத் பேசியிருக்க வாய்ப்பில்லை. வேண்டுமென்றே அவரை உள்நோக்கத்துடன் கேலி செய்யும் வகையில் யாரோ சிலர் இப்படியான நியூஸ் கார்டை புதிய தலைமுறை லோகோ பயன்படுத்தி தயாரித்து, பரப்பியுள்ளனர். மற்றவர்கள் இது உண்மையா, பொய்யா என்று கூட தெரியாமல், வேகமாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மையில், இதுபற்றி நாம் இந்து மக்கள் கட்சி தரப்பிலும், புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு தரப்பிலும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம். இந்த போலியான நியூஸ் கார்டை யாரும் பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:கணிதப் பாடத்தில் சிலுவைக் குறியீடு; இந்துக்கள் படிக்கக்கூடாது என்று அர்ஜூன் சம்பத் கூறினாரா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: False

1 thought on “கணிதப் பாடத்தில் சிலுவைக் குறியீடு; இந்துக்கள் படிக்கக்கூடாது என்று அர்ஜூன் சம்பத் கூறினாரா?

  1. பேஸ்புக்கிற்கு எனது தாழ்மையான வேண்டுகோள்…..
    என்னுடைய பதிவுகள்
    அனைத்தும் ஷேர்ஷாட்டில்(முழுக்க)
    (முழுக்க இந்தியாவில்)
    (தயாரிக்கப்பட்டது)வந்த பதிவுகள்தான்…..
    எப்படி தவறானது என்று என்னால் கண்டு
    பிடிக்க இயலும்??????
    நன்றி💐💐💐💐💐

Comments are closed.