
‘‘ஏழை குடும்பத்தினரை சந்தித்த அண்ணாமலை’’, என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இதுபற்றி நாம் முதலில், பாஜக ஐ.டி., பிரிவினரை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். அவர்கள், ‘’இந்த படத்தில் இருப்பவர் பார்க்க அண்ணாமலை போன்று இருந்தாலும், அவர் வேறொரு நபர் ஆவார்,’’ என்றனர்.
தொடர்ந்து நாம் தகவல் தேடியபோது, இந்த படம் 2019ம் ஆண்டு முதலாக, ஏற்கனவே வெவ்வேறு தலைப்புகளில் பல மொழிகளிலும் பகிரப்பட்டு வருவதைக் கண்டோம்.

FB post Link 1 l FB post Link 2
அண்ணாமலையும், 2019ம் ஆண்டுதான் பணியில் இருந்து விலகி, அரசியலில் ஈடுபட தொடங்கினார்.
அந்த காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட அவரது புகைப்படத்தையும், மேற்கண்ட படத்தில் உள்ள போலீஸ் அதிகாரியையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம்.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:ஏழை குடும்பத்தினரை சந்தித்த அண்ணாமலை என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Fact Crescendo TeamResult: False
