அதிமுக.,வின் கடைசி முதலமைச்சர் நான்தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’அதிமுக சார்பாக, தமிழகத்தை ஆட்சி செய்த கடைசி முதலமைச்சர் நான்தான்,’’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாகக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Twitter Claim Link I Archived Link

இதனை பலரும் உண்மை என நம்பி ட்விட்டர் மட்டுமின்றி ஃபேஸ்புக்கிலும் பகிர்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
சமீபத்தில், 44th Chess Olympiad சென்னை மாநகரில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே விமரிசையாக நடைபெற்றது. இதனை ஆளுங்கட்சியாக உள்ள திமுக வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. அதேசமயம், இந்த விழா தொடக்கம் முதல் இறுதி வரையிலும், திமுக மீது பல்வேறு விமர்சனங்களும் அரசியல் வட்டாரத்தில் முன்வைக்கப்பட்டது.

Oneindia Tamil Link I Indian Express Tamil Link

இந்த சூழலில்தான் மேற்கண்ட வகையில், எடப்பாடி பழனிசாமி பேசியதாகக் குறிப்பிட்டு பலரும் தகவல் பகிர்ந்து வருகின்றனர். உண்மையில், அவர் இப்படி பேசவில்லை. ஜூனியர் விகடன் ஊடகமும் இப்படி எந்த செய்தியும் வெளியிடவில்லை.

இதுதொடர்பாக, நாம் ஜூனியர் விகடன் ஊடகம் மற்றும் அதிமுக ஐ.டி.பிரிவில் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் சிலர் வேண்டுமென்றே இப்படியான போலிச் செய்தியை தயாரித்து பகிர்வதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:அதிமுக.,வின் கடைசி முதலமைச்சர் நான்தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: False