
‘’அவசரத்தால் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது,’’ என்று திருச்சி சிவா அதிருப்தி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ அவசரத்தால் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. திமுகவிலேயே பலருக்கு உடன்பாடு இல்லை – மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா பேச்சு,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3
தந்தி டிவி, மாலை முரசு உள்பட பல்வேறு ஊடகங்களின் லோகோவுடன் இதே கருத்து இடம்பெற்ற நியூஸ் கார்டுகள் வேகமாகப் பகிரப்படுகிறது. இதனை பலரும் உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று கேட்டால், இல்லை என்பதுதான் பதில். ஆம், இதுதொடர்பாக முதலில் திருச்சி சிவா அலுவலகத்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். அவர்கள், ‘’இதுபோன்று திருச்சி சிவா எதுவும் பேசவில்லை; இது எதிர்க்கட்சிகள் பரப்பும் வதந்தி,’’ என்று தெரிவித்தனர்.
அடுத்தப்படியாக, இதுபற்றி தந்தி டிவி டிஜிட்டல் பிரிவை தொடர்புகொண்டு கேட்டபோது, ‘’இது எங்களது பெயரில் பகிரப்படும் போலியான நியூஸ் கார்டு. நாங்கள் ஏற்கனவே இதுகுறித்து X வலைதள பக்கம் மூலமாக மறுப்பு வெளியிட்டுள்ளோம்,’’ என்றனர்.
இதேபோன்று மாலை முரசு ஊடகமும் இன்ஸ்டாகிராம் மூலமாக, மறுப்பு வெளியிட்டுள்ளது. அதனையும் ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.
எனவே, அரசியல் உள்நோக்கத்துடன் திமுக தொடர்பாக வேண்டுமென்றே இவ்வாறு போலியான நியூஸ் கார்டு உருவாக்கி, எதிர்க்கட்சிகள் வதந்தி பரப்புவதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கியதற்கு திருச்சி சிவா அதிருப்தி தெரிவித்தாரா?
Written By: Pankaj IyerResult: False
