
‘’ஜனவரி 26 அன்று தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் உதயம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள்
ஜனவரி 26 குடியரசு தின விழாவில்
அறிவிப்பு வெளியாக உள்ளது.
கடலூர் மாவட்டம் இரண்டாக பிரித்து
விருத்தாசலம் மாவட்டம்,
திருவண்ணாமலை மாவட்டம்
இரண்டாக’பிரித்து செய்யாறு மாவட்டம்.
கோயமுத்தூர் இரண்டாக பிரித்து
பொள்ளாச்சி மாவட்டம்.
தஞ்சாவூர் மாவட்டம் இரண்டாக பிரித்து
கும்பகோணம் மாவட்டம்.
சேலம் மாவட்டம் இரண்டாக பிரித்து ஆத்தூர் மாவட்டம்.
குறிப்பு: இந்த செய்தி இந்த வருடம்
ஜனவரி மாதம் வந்த தகவல்.. இந்த
ஆண்டு (2024) குடியரசு தினம் முடிந்து
விட்டது. ஒருவேளை அடுத்த ஆண்டு
(2025) நடக்குமா என மக்கள் எதிர்பார்ப்பு.’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, ‘இது கடந்த பல மாதங்களாகவே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் ஒன்று. இதுபோன்ற எந்த அறிவிப்பும் தமிழ்நாடு அரசு இதுவரை வெளியிடவில்லை. இது அடிப்படை ஆதாரமற்ற வதந்தி,’’ என்று தெரியவந்தது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ ஃபேக்ட்செக் குழு மறுப்பு தெரிவித்துள்ளது.
TN Fact Check 1 l TN Fact Check 2
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறான ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:‘ஜனவரி 26 அன்று தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் உதயம்’ என்று பரவும் தகவல் உண்மையா?
Written By: Pankaj IyerResult: False
