சாவர்க்கரை இழிவுபடுத்தி பெரியாரை தூக்கிப்பிடிக்கும் அரசியலை அம்பலப்படுத்த வேண்டாமா என்று சீமான் கேட்டாரா?

அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

‘’சாவர்க்கரை இழிவுபடுத்தி பெரியாரை தூக்கிப்பிடிக்கும் அரசியலை அம்பலப்படுத்த வேண்டாமா?’’, என்று சீமான் கேட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ பெரியாரை அம்பலப்படுத்த வேண்டாமா? தேசத்துக்காக சிறை சென்ற  சாவர்க்கரை இழிவுபடுத்தி சுதந்திரத்தைக் கறுப்புதினம் என்ற பெரியாரைத் தூக்கிப்பிடிக்கும் அரசியலை அம்பலப்படுத்த வேண்டாமா? ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையி சீமான் கேள்வி’’, என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3     

புதிய தலைமுறை லோகோ இடம்பெற்றுள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட நியூஸ் கார்டு உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டு என்று தெரியவந்தது. ஆம், புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்ட நியூஸ் கார்டு வேறொன்றாகும். அதனை ஆதாரத்திற்காக, கீழே இணைத்துள்ளோம். 

உண்மையான நியூஸ் கார்டையும் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்ட ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:சாவர்க்கரை இழிவுபடுத்தி பெரியாரை தூக்கிப்பிடிக்கும் அரசியலை அம்பலப்படுத்த வேண்டாமா என்று சீமான் கேட்டாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: ALTERED