மத்திய பாஜக அமைச்சர்களுடன் ஒன்றாக பயணித்த தேர்தல் ஆணையர் என்று பரவும் வீடியோ உண்மையா?

False அரசியல் சார்ந்தவை | Political தேசிய அளவில் I National

தலைமைத் தேர்தல் ஆணையர் பாஜக மத்திய அமைச்சர்களுடன் தனி விமானத்தில் பயணித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சிறிய விமானத்திலிருந்து மத்திய அமைச்சர்கள் மற்றும் சிலர் இறங்கி வருவதையும் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்படும் வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “தலைமை தேர்தல் கமிஷனருக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு மத்திய அரசு வழங்கியது. தனி விமானத்தில பாஜக மந்திரிகளுடன் தலைமை தேர்தல் கமிஷனர். பாஜக மந்திரிகள் வேறு தேர்தல் கமிஷனர் வேறு அல்ல. ராகுல் காந்தியை மிரட்டும் தைரியம் இங்கிருந்துதான் பிறக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வாக்காளர் பட்டியலில் போலியான வாக்காளர்களைச் சேர்த்து பாஜக வெற்றி பெற்று வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. பாஜக-வின் இந்த செயலுக்கு தேர்தல் ஆணையமும் துணை செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையரும் மத்திய அமைச்சர்களும் ஒன்றாக ஒரே விமானத்தில் பயணம் செய்தார்கள் என்று ஒரு வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

வீடியோவை பார்க்கும் போது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் பூஷன் ராமகிருஷ்ண கவாய் விமானத்தில் வந்திருப்பதை காண முடிந்தது. ஆனால், தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையராக உள்ள ஞானேஷ் குமார் அல்லது தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி என யாரையும் அந்த வீடியோவில் காணப்படவில்லை. எனவே, தவறாக வீடியோவை பகிர்ந்திருக்கலாம் என்று ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சியைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோவை மத்திய நாடாளுமன்ற விவகாரம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், அருணாச்சல பிரதேசம் தலைநகர் இட்டா நகரில் கட்டப்பட்டுள்ள கவுகாத்தி உயர் நீதிமன்ற கிளையின் கட்டிடத்தைத் திறந்து வைப்பதற்காக வந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோருக்கு இட்டா நகரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Archive

கவுகாத்தி உயர்நீதிமன்றக் கிளையின் புதிய கட்டிடத்தைத் திறந்து வைப்பதற்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அருணாச்சலபிரதேச தலைநகர் இட்டா நகருக்கு வந்துள்ளார். அவருடன் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், அருணாச்சலபிரதேசத்தின் எம்.பி-யும் மத்திய அமைச்சருமான கிரண் ரிஜ்ஜூ ஆகியோர் விமானத்தில் வந்துள்ளார். இதைத் தவறாக தலைமைத் தேர்தல் ஆணையர் மத்திய பாஜக அமைச்சர்களுடன் ஒன்றாகப் பயணிக்கிறார் என்று தவறாக பகிர்ந்துள்ளனர். இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

இட்டா நகரில் உயர்நீதிமன்ற கிளை கட்டிட திறப்புக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வந்த வீடியோவை பாஜக அமைச்சர்களுடன் தனி விமானத்தில் ஒன்றாக பயணித்த தலைமை தேர்தல் ஆணையர் என்று தவறாக சமூக ஊடகங்களில் பகர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:மத்திய பாஜக அமைச்சர்களுடன் ஒன்றாக பயணித்த தேர்தல் ஆணையர் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply