
‘’கரூரில் ஒரே கிராமத்தை சேர்ந்த 6 பேர் பலியானதால் தவெக., ஒட்டுமொத்தமாக, கலைக்கப்பட்டது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ கரூரில் ஒரே கிராமத்தை சேர்ந்த 6 பேர் பலியானதை தொடர்ந்து ,அந்த கிராமத்தில் உள்ள ஒட்டுமொத்த TVK கட்சியும் கலைக்கட்டது.கொடிக்கம்பமும் சாய்க்கப்பட்டது.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இந்த வீடியோவுக்கும், சமீபத்தில் கரூரில் நிகழ்ந்த தவெக., பிரசார கூட்ட நெரிசலுக்கும் எந்த தொடர்பும் இல்லை, என்று தெரியவந்தது.

ABP Nadu Link 1 l Link 2 l Link 3
மாவட்ட, மாநில, தேசிய நெடுஞ்சாலையில் இடையூறாக உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்பேரில், தமிழ்நாடு முழுக்க பல்வேறு அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டு வருகிறது. இதேபோன்று, மேற்கண்ட தவெக., கொடி கம்பம் அகற்றப்படும் காட்சியும் பதிவு செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. ஆனால், இது எங்கே எடுக்கப்பட்ட வீடியோ என்பது தெரியவில்லை. அதேசமயம், கரூரில் தவெக., பிரசார கூட்ட நெரிசல் நிகழ்ந்த நாள் செப்டம்பர் 27, 2025.
எனவே, பழைய வீடியோ ஒன்றை எடுத்து, கரூர் கூட்ட நெரிசல் துயரத்துடன் தொடர்புபடுத்தி, வேண்டுமென்றே சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:கரூரில் ஒரே கிராமத்தை சேர்ந்த 6 பேர் பலியானதால் தவெக., கலைக்கப்பட்டதா?
Fact Check By: Pankaj IyerResult: False
