
‘’சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக ஓபிஎஸ் தற்போது ஆதரவு,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், புதிய தலைமுறை பெயரில் வெளியான பிரேக்கிங் செய்தி ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’சசிகலா பொதுச் செயலாளராக வேண்டும் என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை – ஓ.பன்னீர்செல்வம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனை தற்போது 2021ம் ஆண்டில் ஓபிஎஸ் பேசியதாகக் கூறி பலரும் இதனை ஷேர் செய்வதைக் காண முடிகிறது.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட தகவல் உண்மையா என்றால், உண்மைதான்; ஆனால், 2016ம் ஆண்டில் வெளியானதாகும்.
அப்போது, இந்த செய்தி பல்வேறு ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது.
தற்போதைய சூழலில் சசிகலா சிறையில் இருந்து திரும்பிவிட்டார். ஆனால், அவரை மீண்டும் அதிமுக.,வில் சேர்க்க ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி அணி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சசிகலா தரப்பினர் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.
எனவே, ஓ.பன்னீர்செல்வம் பற்றி 2016ம் ஆண்டில் வெளியான செய்தியை தற்போது புதியது போல பகிர்ந்து, சமூக வலைதள பயனாளர்களிடையே குழப்பம் ஏற்படுத்தியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக ஓபிஎஸ் தற்போது ஆதரவு தெரிவித்தாரா?
Fact Check By: Pankaj IyerResult: Misleading
