அண்ணாமலை மது போதையில் பேசுகிறார் என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?

அரசியல் | Politics இந்தியா | India தமிழ்நாடு | Tamilnadu

‘’அண்ணாமலை மது போதையில் பேசுகிறார் என்று புதிய தலைமுறை செய்தி,’’ என குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு நியூஸ் கார்டு பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049044263) வழியே அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். இதே செய்தியை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.

Tweet Claim Link l Archived Link 

உண்மை அறிவோம்:

பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலைக்கும், புதிய தலைமுறை செய்தியாளருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் சூழலில், இரு தரப்பினரும் தொடர்ச்சியாக ஒருவரை ஒருவர் விமர்சித்தும் வருகின்றனர்.


mediyaan link l puthiyathalaimurai link l minnambalam link

இந்த சூழலில்தான் மேற்கண்ட வகையில் சிலர் புதிய தலைமுறை லோகோவுடன், அண்ணாமலை மது அருந்திவிட்டுப் பேசுவதாகக் குறிப்பிட்டு பகிர தொடங்கியுள்ளனர்.

உண்மையில், இதனை புதிய தலைமுறை ஊடகம் வெளியிடவில்லை. இதுபற்றி அவர்களது தரப்பில் அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது.


எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தி போலியான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 
முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram 

Avatar

Title:அண்ணாமலை மது போதையில் பேசுகிறார் என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: False