பலுசிஸ்தானில் பாக்., கொடி எரிப்பு என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social சர்வதேசம் | International

பலுசிஸ்தானில் பாகிஸ்தான் கொடி எரிக்கப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: x.com I Archive

பாகிஸ்தான் கொடியை இருவர் எரிக்கும் வீடியோ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பலோசிஸ்தானில் மக்கள் பாக் கொடியை தீ வைத்துக் கொளுத்துகின்றனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் ரீபோஸ்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மக்கள் பல ஆண்டுகளாகவே தனிநாடு கேட்டு வருகின்றனர். பாகிஸ்தான் அரசை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகின்றனர். எனவே, பலுசிஸ்தான் மக்கள் பாகிஸ்தான் கொடி மீது வெறுப்பைக் காட்டுவது வழக்கமான ஒன்றுதான். பாகிஸ்தானும் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. எனவே, இந்த சம்பவம் இப்போது நடந்ததுதானா என்று அறிய ஆய்வு செய்தோம்.

வீடியோவை புகைப்படங்களாக மாற்றி ரிசர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். எந்த முடிவும் நமக்குக் கிடைக்கவில்லை. எனவே கூகுளில், “பாகிஸ்தான் கொடியை எரித்த பலுசிஸ்தான் மக்கள்” என்று ஆங்கிலத்தில் டைப் செய்து தேடினோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ தொடர்பான தகவல் நமக்குக் கிடைத்தது.

உண்மைப் பதிவைக் காண: newsvibesofindia.com I Archive

இந்த வீடியோவுடன் கூடிய செய்தியை newsvibesofindia.com 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி வெளியிட்டிருந்தது. அதன் யூடியூப் பக்கத்திலும் இந்த வீடியோ 2020 ஆகஸ்ட் 14ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அந்த செய்தியில் பாகிஸ்தான் தன்னுடைய சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 14ம் தேதி கொண்டாடுகிறது. ஆனால் பலுசிஸ்தான் மக்கள் அதைக் கொண்டாடுவது இல்லை. தங்களை தனிப் பகுதியாகவே கருதுகின்றனர். 1948ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி பலுசிஸ்தான் பகுதி வலுக்கட்டாயமாக பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பலுசிஸ்தான் மக்கள் பாகிஸ்தான் கொடியை எரித்ததாகப் பரவும் செய்தி உண்மைதான். ஆனால் அது 2024ல் நடந்தது இல்லை. 2020ல் நடந்த வீடியோவை இப்போது பகிர்ந்திருப்பதன் மூலம் இப்போது நடந்தது போன்ற தோற்றத்தை இந்த பதிவு ஏற்படுத்துகிறது. 2020ம் ஆண்டு இந்த சம்பவம் நடந்தது என்று குறிப்பிட்டிருந்தால் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்த்திருந்திருக்கலாம்.

முடிவு:

பாகிஸ்தானின் கொடியை பலுசிஸ்தான் மக்கள் எரித்தார்கள் என்று 2024 ஆகஸ்டில் பரவும் வீடியோ 2020ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பலுசிஸ்தானில் பாக்., கொடி எரிப்பு என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False