‘திமுக அரசு மதிக்கவில்லை’ என்று திருமாவளவன் கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’ அரியலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரிக்கு நாளை அடிக்கல் நாட்டப்படுகிறது. தொகுதியின் மக்கள் பிரதிநிதி (MP) என்கிற முறையில் கூட தகவல் இல்லை. இது மாநில அரசின் நிதியால் மட்டுமே உருவாக்கப்படவில்லை. இந்த அரசியல் அணுகுமுறை ஞாயம் தானா?’’ என்று திருமாவளவன் கேட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ இந்த அரசியல் அணுகுமுறை ஞாயம் தானா? அரியலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரிக்கு நாளை அடிக்கல் நாட்டப்படுகிறது. தொகுதியின் மக்கள் பிரதிநிதி (MP) என்கிற முறையில் கூட தகவல் இல்லை. இது மாநில அரசின் நிதியால் மட்டுமே உருவாக்கப்படவில்லை. இந்த அரசியல் அணுகுமுறை ஞாயம் தானா? முதல்வரின் பார்வைக்கு.. தொல். திருமாவளவன் எம்.பி,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

வெளிச்சம் டிவி லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.  

Claim Link 

உண்மை அறிவோம்:

திருமாவளவன் இவ்வாறு ஏதேனும் சமீபத்தில் கருத்து வெளியிட்டுள்ளாரா என்று தகவல் தேடினோம். எந்த செய்தியும் காண கிடைக்கவில்லை. அடுத்தப்படியாக, வெளிச்சம் டிவி ஆசிரியர்கள் குழுவை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். அப்போது, ‘’இது தற்போதைய செய்தி அல்ல. கடந்த 2020ம் ஆண்டு அரியலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டியது தொடர்பாக, அப்போதைய அதிமுக அரசை விமர்சித்து, திருமாவளவன் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதனையே மேற்கோள் காட்டி, நாங்களும் அப்போது செய்தி வெளியிட்டோம். அந்த செய்தியை எடுத்து, புதியதுபோல தற்போது சிலர் மறுபகிர்வு செய்து வருகிறார்கள்,’’ என்று தெரிவித்தனர்.  

இதன்படி, 2020ம் ஆண்டு வெளிச்சம் டிவி வெளியிட்ட ட்வீட் லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

Velicham TV Tweet Link 

இதுதொடர்பாக, மற்ற ஊடகங்களிலும் 2020ம் ஆண்டே செய்தி வெளியாகியுள்ளது. 

Maalaimalar Link l Hindu Tamil Link l New Indian Express Link

அதிமுக ஆட்சிக்காலத்தில் அரியலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டிய நிலையில், கட்டுமானப் பணிகள் முடிவடைந்து, 2022ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது அந்த கல்லூரி திறந்து வைக்கப்பட்டும் விட்டது. ஆனால், அதன் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்றும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. 

Hindu Tamil Link l Dailythanthi Link l Dinamani Link 

எனவே, 2020ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தின்போது திருமாவளவன் கேள்வி கேட்டதை எடுத்து, தற்போதைய திமுக ஆட்சியுடன் தொடர்புபடுத்தி, வதந்தி பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram 

Avatar

Title:‘திமுக அரசு மதிக்கவில்லை’ என்று திருமாவளவன் கூறினாரா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: False