‘’பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் தவறில்லை’’ என்று எஸ்.பி.வேலுமணி அறிக்கை வெளியிட்டதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

கதிர் நியூஸ் லோகோவுடன் உள்ள இதில், ‘’ பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் தவறில்லை! பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் தவறில்லை! தலைவர்கள் தவறு செய்யும்போது திருத்த வேண்டிய இடத்தில் தொண்டர்களாகிய நாங்கள் இருக்கிறோம். - எஸ்.பி.வேலுமணி அறிக்கை,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட வகையில், எஸ்.பி.வேலுமணி எதுவும் அறிக்கை வெளியிட்டாரா என்று தகவல் தேடினோம். ஆனால், எந்த செய்தியும் காண கிடைக்கவில்லை. அதிமுக ஐ.டி. பிரிவு தரப்பில் நாம் கேட்டபோது, ‘இவ்வாறு அவர் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை,’ என்றனர்.

அடுத்தப்படியாக, கதிர் நியூஸ் தரப்பில் விசாரித்தபோது, ‘’இதனை நாங்கள் வெளியிடவில்லை. இது எங்களது பெயரில் பரவும் வதந்தி,’’ என்றனர். மேலும், அவர்கள் இதுபற்றி ஃபேஸ்புக்கில் மறுப்பு வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். அதனை கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

எனவே, மேற்கண்ட நியூஸ் கார்டு போலியானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் தவறில்லை’ என்று எஸ்.பி.வேலுமணி அறிக்கை வெளியிட்டாரா?

Written By: Fact Crescendo Team

Result: False