பிரியாணி சாப்பிடுபவர்கள் உண்மையான இந்துக்கள் இல்லை என்று அண்ணாமலை கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’பிரியாணி சாப்பிடுபவர்கள் இந்துக்கள் இல்லை – அண்ணாமலை,’’ என்று குறிப்பிட்டு ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

தந்தி டிவி லோகோவுடன் பகிரப்பட்டுள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’பிரியாணி சாப்பிடுபவர்கள் இந்துக்கள் இல்லை. பிரியாணி, கிரில் சிக்கன், பார்பிக்யூ போன்ற அரேபிய உணவுகளை உண்பவர்கள் உண்மையான இந்துக்கள் இல்லை. இதுபோன்ற அந்நிய உணவுகளை தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும். பாஜக தலைவர் அண்ணாமலை,’’ என்று எழுதியுள்ளனர்.

இதனைப் பலரும் உண்மை என நினைத்து, பாஜக.,வை கிண்டல் செய்யும் நோக்கில் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Twitter Claim Link I Archived Link

இதேபோல, மற்றொரு நியூஸ் கார்டும் நியூஸ் 7 தமிழ் லோகோவுடன் பகிரப்பட்டு வருவதையும் கண்டோம்.

FB Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
இதுதொடர்பாக நாம், தந்தி டிவி மற்றும் நியூஸ் 7 தமிழ் ஊடகத்தின் டிஜிட்டல் பிரிவினரை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். அப்போது, ‘’இது எங்களது பெயரில் பரவும் போலியான செய்தி,’’ என்று அவர்கள் தெரிவித்தனர். 

இதன்பேரில், பாஜக ஐடி பிரிவு நிர்வாகி நிர்மல் குமார் ட்விட்டரில் மறுப்பு தெரிவித்து, பதிவு வெளியிட்டதையும் கண்டோம். அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

Archived Link

எனவே, பாஜக.,வை கேலி செய்யும் நோக்கில் தயாரித்து பகிரப்பட்ட போலியான செய்தியை பலரும் உண்மை என நம்பி பகிர்கிறார்கள் என்று நமக்குச் சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:பிரியாணி சாப்பிடுபவர்கள் உண்மையான இந்துக்கள் இல்லை என்று அண்ணாமலை கூறினாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False