
ராகுல் காந்தியுடன் இளம்பெண் ஒருவர் சிரித்துப் பேசும் புகைப்படத்தை எடுத்து, அவர் பொது மக்கள் முன்னிலையில் கடலை போடுவதாகச் சிலர் சமூக வலைதளங்களில் தகவல் பகிர்ந்து வருகின்றனர். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
காங்கிரஸ் கட்சி சார்பாக, நாடு தழுவிய யாத்திரை ஒன்றை ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார். Bharat Jodo Yatra என்ற பெயரில், பாஜக ஆட்சியில் நடைபெறும் அவலங்களை கண்டித்து இந்த யாத்திரை நடைபெற்று வருகிறது. இதையொட்டி, ராகுல் காந்தியை பாஜக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள். அந்த வரிசையில் தமிழக பாஜக.,வின் ஐடி பிரிவு நிர்வாகி நிர்மல் குமார், ராகுல் காந்தி இளம்பெண் ஒருவருடன் சிரித்துப் பேசுவது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து, அவருக்கு திருமணமாகாத காரணத்தால், இப்படி பொது இடங்களில் இளம்பெண்களிடம் அத்துமீறி நடந்துகொள்கிறார் எனும் அர்த்தத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து, தனது பதிவை நிர்மல் குமார் ட்விட்டரில் இருந்து நீக்கிவிட்டார். எனினும், இதுபற்றி போலீசில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது.

இதன்படி, ராகுல் காந்தி, தனது சகோதரி பிரியங்காவின் மகளுடன் சிரித்துப் பேசுவது போன்ற இந்த புகைப்படம் பழையதாகும். அதற்கும், Bharat Jodo Yatraக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதனை வேண்டுமென்றே ட்விட்டரில் பகிர்ந்து தவறான அர்த்தம் கற்பிக்க முயன்ற பாஜக நிர்வாகி நிர்மல் மீது போலீஸ் புகார் தரப்பட்டுள்ளது. எனவே, இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என்று நமது வாசகர்களை கேட்டுக் கொள்கிறோம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:ராகுல் காந்தி இளம்பெண்ணிடம் சிரித்துப் பேசும் புகைப்படம் என்று பரவும் வதந்தி…
Fact Check By: Fact Crescendo TeamResult: Missing Context
